மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தங்க வியாபாரி வீட்டில் இருவரை கொலைசெய்து கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 17 கிலோ தங்க நகைகள், இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ரமேஷ், மனிஷ், கருணாராம் ஆகியோர் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் நேற்று (ஜன. 28) நிலைதடுமாறி கீழே வழுக்கி விழுந்ததில் அவர்களது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.