ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

நண்பரை கொன்று வீட்டில் புதைத்தவர் கைது - கொலை

நாமக்கல் அருகே  30 லட்ச ரூபாய் பணத்தை கேட்டு ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்திகொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை
author img

By

Published : Jun 8, 2020, 1:29 AM IST

நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ். அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரும், நாமக்கல் பொன்விழா நகர் பகுதியை சேர்ந்த மாற்று திறனாளியான நரேஷ் குமார் என்பவரும் நண்பர்கள். இவர்கள் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழிலும் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நரேஷ்குமார் மூலமாக பலருக்கு தினேஷ் 30 லட்சம் கடன் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு எவ்விதமான வட்டியையோ, அசல் தொகையையோ கொடுக்காத நிலையில் நரேஷ் குமாருக்கும் தினேஷுக்கும் கடந்த 4ஆம் தேதி வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

தகராறு முற்றிய நிலையில் நரேஷ்குமார், தான் வைத்திருந்த கத்தியால் தினேஷை குத்த முயல அதிலிருந்து தப்பித்த தினேஷ் அதே கத்தியை பிடுங்கி நரேஷ்குமாரை குத்தி கொலை செய்து அவரது வீட்டிற்குள்ளேயே புதைத்து விட்டார்.

நரேஷ்குமாரை காணாமல் அவரது வீட்டாரும் உறவினர்களும் தேடிய சூழலில் தான் செய்த தவறை தினேஷ் உணர்ந்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.

in article image
தோண்டி எடுக்கப்படும் உடல்

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து புதைக்கப்பட்ட நரேஷ்குமாரின் உடலை நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அருளரசு, வட்டாட்சியர் பச்சமுத்து முன்னிலையில் தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தினேஷை கைது செய்த நாமக்கல் போலீசார் இந்தக் கொலையை அவர் மட்டும் செய்தாரா அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details