தமிழ்நாடு

tamil nadu

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சகோதர உறவுமுறை கொண்ட இளைஞன்!

கன்னியாகுமரி: பதிமூன்று வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய, சகோதர உறவுமுறை கொண்ட இளைஞனை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

By

Published : Nov 7, 2019, 5:30 PM IST

Published : Nov 7, 2019, 5:30 PM IST

kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் கீறிப்பாறை அருகே வெள்ளாம்பி காணிமலை பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு பதிமூன்று வயதில் ஒரு மகள் உள்ளார். தற்பொழுது இந்தப் பெண் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது அந்த மாணவி இரண்டுமாத கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் அவரது பெற்றோர் கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவ்வூர் மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, கீறிப்பாறை காவல் நிலையத்தினர் வந்து விசாரித்தபோது, அதே ஊரைச் சேர்ந்த அண்ணன் உறவுமுறை கொண்ட சந்துரு(19) என்ற இளைஞன்தான் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து, மாணவி, சந்துரு இருவரையும் கீறிப்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் பள்ளி மாணவிக்கு பதிமூன்று வயதுதான் என்பதால், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் சந்துரு

சந்துருவை தற்போது கீறிப்பாறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அண்ணன் உறவு முறை கொண்ட இளைஞனே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள் - ஏர்வாடியில் நடந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details