தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 18, 2020, 8:47 PM IST

ETV Bharat / jagte-raho

வங்கியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி!

சென்னை: தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பெண்களிடம் ரூ. 23 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

cheating
cheating

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் ஆரோக்கியமேரி(30). இவர் ஆன்லைன் மூலமாக பான் கார்டு, ஆதார் கார்டு அப்ளை செய்து கொடுக்கும் பணி செய்து வந்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெருமாள் பேட்டையைச் சேர்ந்த ராஜ் பரத் (35) என்பவர் அவரது உறவினருக்கு பான் கார்டு அப்ளை செய்ய வந்துள்ளார்.

அப்போது ஜெனிபருக்கும் ராஜ் பரத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜ் பரத் வங்கியில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு வங்கியில் அலுவலர்களை தெரியும் என்றும் ஜெனிஃபரிடம் கூறியுள்ளார். மேலும், ஜெனிஃபருக்கு வங்கியில் கட்டாயமாக பணி வாங்கி தருவதாகவும் அதற்கு 7 லட்சம் ரூபாய் செலவாகும் என ராஜ் பரத் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஜெனிஃபர் தனது தோழியான பரிமளா, ரேவதி ஆகியோருக்கும் வங்கியில் வேலை வேண்டுமென கூறி மொத்தம் 23 லட்ச ரூபாயை ராஜ் பரத்திடம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து சில மாதங்கள் கடந்த நிலையில், ராஜ் பரத் வங்கியில் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெனிஃபர் ராஜ் பரத்திடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு பதில் பேச மறுத்துள்ளார்.

இதனிடையே, ராஜ் பரத் தலைமறைவானார். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெனிஃபர், இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வேப்பேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராஜ் பரத் மற்றும் அவரது தந்தை கோபால கிருஷ்ணன் ஆகியோர் இதே போன்று பல மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் மீது ஏற்கனவே வேப்பேரி காவல் நிலையத்தில் இரண்டு மோசடி வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால் தலைமறைவாக உள்ள ராஜ்பரத்தை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கோபால கிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள ராஜ் பரத்தை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய எவ்வளவு காலம் ஆகும்? நீதிமன்றம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details