மெரினா கடற்கரை அருகேயுள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராம் (எ) ராம்குமார் (24). ஆட்டோ ஓட்டுநரான இவர் மீது ஏற்கனவே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் ராம்குமார், நடேசன் சாலையிலுள்ள ஒரு கடையின் முன்பு தனது நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ராம்குமாரை கத்திஇ உருட்டுக்கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர், அங்கிருந்து ராம்குமாரை ஆட்டோவில் கடத்திக்கொண்டு நடுக்குப்பம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையினுள் வைத்து தாக்கியபின், ரத்த வெள்ளத்தில் கிடந்த ராம்குமாரை ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர்.