தமிழ்நாடு

tamil nadu

காவலர் வேடமணிந்து பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!

By

Published : Nov 17, 2020, 10:54 AM IST

கன்னியாகுமரி : காக்கி சீருடையில் காவலர் வேடமணிந்து பொதுமக்களிடம் வசூலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

காவலர் வேடமணிந்த இளைஞர்
காவலர் வேடமணிந்த இளைஞர்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் காக்கி சீருடையில் சொகுசு வாகனத்தில் வந்த ஒருவர் காவல் அலுவலர் என்று கூறி வாகன சோதனையில் ஈடுபட்டு ஹெல்மெட், முகக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ஐந்நூறு முதல் ஐந்தாயிரம் வரை கேட்டுள்ளார்.

அந்த இளைஞர் அணிந்திருந்த காக்கி சீருடை, அவனது செய்கையில் சந்தேகம் அடையவே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவனை சுற்றி பிடித்து விசாரித்தபோது, அவன் வன்னியூர் பகுதியை சேர்ந்த பிபின் (25) என்றும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் செக்குரிட்டியாக வேலைபார்பதற்கான ஐடி கார்டு ஒன்றை காண்பித்தார்.

காவலர் வேடமணிந்த இளைஞர்

தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து, களியக்காவிளை காவல்துறையினரிடம் பொதுமக்கள் அவரை ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பர்தாமன் நகர் எண்ணெய் ஆலையில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details