சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் செல்ஃபோன்கள் திருட்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. இந்நிலையில் அங்கு பணியாற்றும் அரசு மருத்துவரான ஐஸ்வர்யாவின் விலை உயர்ந்த செல்ஃபோனும் கடந்த டிசம்பர் மாதம் திருட்டு போனது. இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார்.
அதன்பேரில், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், செல்ஃபோன்கள் திருடப்படும் காட்சி பதிவாகியிருந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை காவலர்கள் தேடி வந்த நிலையில், புளியந்தோப்பைச் சேர்ந்த சத்தியராஜ், கொடுங்கையூரைச் சேர்ந்த ஜாகிர் உசேன் ஆகியோரை, சைபர் கிரைம் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.