தஞ்சாவூரிலுள்ள கலைஞர் நகர் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் திருப்பூர் சிக்கண்ணா கலை கல்லூரி பின்புறமுள்ள காமாட்சிபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை குளத்தூர் நாயக்கர்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த்(27). திருப்பூரில் தங்கி, பின்னலாடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் கட்டிங் யூனிட் வைத்து நடத்தி வருகிறார்.
தொழில்ரீதியாக மூர்த்தி,அரவிந்திற்கு இடையே சில நாள்களுக்கு முன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் இணைந்து தொழில் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, மூர்த்தி, அரவிந்த் இருவரும் இணைந்து கடந்த ஜனவரி 1ஆம் தேதி திருப்பூர் ரங்கநாதபுரம் 3வது வீதியில், எஸ்.எம். பாலி பேக்ஸ் என்ற பெயரில் பின்னலாடை தொடர்பான நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தை தொடங்க அரவிந்த் பணமுதலீடு அளித்துள்ளார். மூர்த்தி பணம் எதுவும் கொடுக்கவில்லை என தெரிகிறது. நிறுவனம் தொடங்கி ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், லாப-நஷ்ட கணக்கு காட்டவில்லை என இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.