தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எம்.செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின் (20). மினி லாரி ஓட்டுநரான இவருக்கு தர்மபுரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
தினமும் இவர்கள் இருவரும் செல்போனில் பேசி, பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உரையாடல்களின்போது லெனின், வாட்ஸ்அப் மூலமாக சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், புதிய தொழில் தொடங்க பணம் தேவைப்படுவதாக கூறி சிறுமியிடமிருந்து, 25 சவரன் தங்க நகைகளை வாங்கி உள்ளார்.
தொடந்து, சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.