திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கரிகாலன் நகர், பெரியார் நகர், பவானி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள், ஒரு லாரி, குட்டி யானை, ஆட்டோ உள்ளிட்டவற்றின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நள்ளிரவில் உடைத்துள்ளார்.
இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்ததில் ஒருவர் கார் கண்ணாடிகளை உடைக்கும் காட்சி பதிவாகியிருந்தது.