தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பைக் - லாரி நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி

கரூர் : இருசக்கர வாகனமும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார்.

selvakumar died in accident
selvakumar died in accident

By

Published : Sep 16, 2020, 2:09 PM IST

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட மாமரத்துப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 41). இவர் கரூரிலுள்ள சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள சீத்தப்பட்டியில் இருந்து ஐந்து ரோடு இணைப்பு சாலையில் எதிர்திசையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

இவ்வேளையில் கரூரிலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, எதிரே வந்த இருச்சக்கர வாகனத்தின்மீது மோதியதில் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் உடல் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், விபத்து குறித்து அரவக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details