தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சின்ன கவுண்டர் வீட்டில் திருட்டு - காவல் துறையினர் விசாரணை! - kallakurichi chinna salem theft

கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற கொள்ளையர்கள். வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை.

kallakurichi chinna salem theft
kallakurichi chinna salem theft

By

Published : Nov 12, 2020, 2:44 PM IST

கள்ளக்குறிச்சி: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தாலி, அலமாரியில் இருந்த பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள எலவடி கிராமத்தில் சின்னகவுண்டர் - மல்லிகா தம்பதி வசித்து வருகின்றனர். இச்சூழலில் மல்லிகா தனது வீட்டில் இரவு தூங்கிக்கொண்டிருந்த வேளையில், அதிகாலை வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், மல்லிகாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கத் தாலியையும், அலமாரியில் இருந்த ஒன்றரை லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து மல்லிகாவின் கணவர் சின்னகவுண்டர், சின்னசேலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details