பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன் (28), இவர் கர்நாடக மாநிலம், ஷிமோகா நகரைச் சேர்ந்தவர். இதே ஊரைச் சேர்ந்த நிவேதா(19) என்பவரைக் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு திண்டல் அருகே வேப்பம் பாளையத்தில் குடியிருந்து வந்துள்ளனர். முனியப்பன் லாரிகளுக்கு கேஸ் உருளை ஏற்றும் ஊழியராகவும், இவரது மனைவி கடையிலும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு முனியப்பன் வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டு, இரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் நிவேதா வேறொரு வாலிபரோடு உறவில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து நிவேதாவிற்கும், முனியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முனியப்பன் நிவேதாவை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கோபத்தின் உச்சத்திலிருந்த முனியப்பன் நிவேதிதாவைக் கீழே தள்ளி கழுத்தைத் துண்டாக அறுத்துள்ளார்.