தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சிறுமிக்கு பாலியல் தொல்லை - அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு பிணை மறுப்பு - நாஞ்சில் முருகேசன்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசனுக்கு பிணை வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

mla
mla

By

Published : Sep 23, 2020, 3:39 PM IST

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த நாகர்கோவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அதிமுகவிலிருந்தும் நீக்கப்பட்டார். இவ்வழக்கில் பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "என் மீது உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனையப்பட்ட வழக்கான இதில், பிணை கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு பிணை வழங்க வேண்டும். பிணை வழங்கினால் சாட்சிகளைக் கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நாஞ்சில் முருகேசனுக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பேசிய நீதிபதி, சிறுமியை பெற்றத் தாயுடன் சேர்ந்து ஒரு பொறுப்பான பதவியிலிருந்த ஒருவர் செய்த இச்செயலை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

எனவே, நாஞ்சில் முருகேசனுக்கு பிணை வழங்க முடியாது எனக்கூறிய நீதிபதி, விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: குமரியில் ஊரடங்கு விதிமீறல்... பாஜகவைச் சேர்ந்த 970 பேர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details