தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2020, 8:47 PM IST

ETV Bharat / jagte-raho

250 கிலோ குட்கா போதைப்பொருட்கள் கடத்தல்!

ஆட்டோவில் குட்கா போதைப் பாக்குகளை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

seized
seized

சென்னை: ஆட்டோவில் குட்கா போதை பாக்குகளை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தரமணியில், தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களை ஆட்டோவில் கடத்திச் சென்று சிலர் விற்பதாக மயிலாப்பூர் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், தரமணி களிகுன்றம் பகுதியில் வாகனச் சோதனையில் தனிப்படை காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அதனை எடுத்து வந்த புருசோத்தமன் (25) மற்றும் மாரிசங்கர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட 250 கிலோ குட்கா, ஆட்டோ ஆகியவற்றையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இருவரிடமும், குட்கா கடத்தல், விற்பனை குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் கடையில் திருட்டு; புகாரை கண்டுகொள்ளாத காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details