தமிழ்நாடு

tamil nadu

ஒசூரில் தொடரும் திருட்டுச் சம்பவம்: 2 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்...!

By

Published : Sep 28, 2019, 9:30 AM IST

கிருஷ்ணகிரி: ஒசூரில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

Hosur

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் பல்வேறு திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடையவர்கள் சதாம், இம்ரான் கான். இவர்கள் முதியவர்களை குறிவைத்து இருசக்கர வாகனங்களில் சென்று தங்கச் சங்கலிகளை பறிப்பது, கத்தியைக்காட்டி வழிப்பறி செய்வது, வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து கொள்ளையடிப்பது உள்ளிட்ட செயல்களில் கைதேர்ந்தவர்களாக இருந்துவந்துள்ளனர்.

இதையடுத்து, ஓசூர் காலேகுண்டா பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இந்த இரண்டு இளைஞர்கள் மீது ஒசூர் நகர காவல் நிலையத்தில் ஐந்திற்கு மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் பரிந்துரைப்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், ஓசூர் நகர காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சதாம், இம்ரான் கான்.

குண்டர் சட்டம் என்றால் என்ன? அதன் அதிகார வரம்புகள் என்ன? குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டோருக்கு உள்ள வாய்ப்புக்கள் என்ன? ஏழு முக்கிய தகவல்கள்:

1. குண்டர் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர், "தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்" ஆகும்.

2. இந்தச் சட்டத்தின் மூலம் அலுவலர்கள் ஒருவரை சிறையில் தள்ள முடியும். நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும் கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.

3.குண்டர்கள் என்ற வரையறையை விளக்கும்போது, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ்வரும் குற்றம் எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்.

4. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சரியா என்பதை நீதிபதி உள்ளிட்டோரைக் கொண்ட ஆலோசனைக் குழு முடிவு செய்யும். அந்தக் குழு முடிவு செய்தாலும் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற முடியும்.

5. குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டால், அந்த நபரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். மாநில அரசு விரும்பினால் முன்கூட்டியே விடுவிக்கலாம்.

6. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர் நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்கும்.

7. 2006ஆம் ஆண்டில்தான் திரையுலகினரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக பதிவு செய்வது, சி.டி.க்களில் பதிவு செய்து விற்பதும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதையும் படிங்க

மாணவியை 6 மாத கர்ப்பமாக்கிய மாணவன்... போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details