தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஒரத்தநாட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - Orathanadu

தஞ்சாவூர்: முகநூலில் காதலித்து திருமணம் செய்துகொண்டு கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

girl-student-kills-self-by-hanging-in-orathanadu

By

Published : Jul 23, 2019, 1:50 PM IST

ஈரோடு மாவட்டம், தாளவாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் இந்துமதி (21), ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துவந்துள்ளார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் சதீஷ்குமாருக்கும் (28) இந்துமதிக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது பின்னாளில் காதலாக மாறவே ஓராண்டிற்கு முன்பு, இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள எழுத்துக்காரர் தெரு பத்மா காலனியில் இத்தம்பதியர் வாடைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

சதீஷ்குமார் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் மெக்கானிக் கடையில் வேலை பார்த்துவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு சென்ற சதீஷ் குமார், வீட்டின் கதவைத் திறந்தபோது மனைவி இந்துமதி தூக்கில் தொங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இறந்த மாணவியின் கணவர்

சதீஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இந்துமதியின் சடலத்தை மீட்டனர். பின்னர், இது குறித்து ஒரத்தநாடு காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவயிடத்துக்குச் சென்ற காவல் துறையினர் இந்துமதியின் உடலை உடற்கூறாய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், தம்பதியருக்கு திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் ஒரத்தநாடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு-வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details