தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

டெல்லியில் ரயிலுக்கு காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - ரயிலுக்கு காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

டெல்லி: ரயில் நிலைய நடைமேடையில் அமர்ந்திருந்த பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

gang-rape
gang-rape

By

Published : Dec 14, 2020, 2:12 PM IST

டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்துள்ளது. டெல்லி ஷாகுர் பஸ்தி ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் கடந்த டிசம்பர் 10ஆம் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. இளம்பெண் ஒருவர் நடைமேடையில் ரயிலுக்குக் காத்திருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

அந்தப்பெண் வீட்டிற்கு வந்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார். உறவினர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண் மங்கோல்பூரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.

அதே நாளில் ரயில் நிலையத்தில் உள்ள கேட்டரிங் ஸ்டாலில் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

24 மணி நேரமும் ரோந்துப் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுவரும் ரயில் நிலையத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தொழில் நுட்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்மார்ட் ஹவுஸ் - இளைஞரின் புதிய முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details