அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் மாரிதாஸ் என்பவர், ’மாரிதாஸ் பதில்கள்’ என்ற தலைப்பில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இவர் திக, திமுக, திராவிட இயக்கங்களை கடுமையாக விமர்சித்தும், பாஜக, ஆர்.எஸ்.எஸ், ரஜினி போன்றோரை ஆதரித்தும் பதிவிடுவதாக குற்றஞ்சாட்டு உள்ளது. இந்நிலையில் மாரிதாஸ், சில பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கடுமையாக சாடி காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, போலி இ-மெயில் ஆதாரங்களை வைத்து அவதூறு பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து திமுக, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் பத்திரிகையாளர் ஆசிஃப் முகமது ஆகியோர் மாரிதாஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.