தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 2, 2019, 10:59 AM IST

ETV Bharat / jagte-raho

திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த இளைஞர் படுகொலை - 5 பேர் கைது

விழுப்புரம்: திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த இளைஞரை வெட்டி படுகொலை செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகள்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவர், உளுந்தூர்பேட்டையில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார்.

மூலசத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல், இருசக்கர வாகனத்தை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள்

தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, கொலைக் கும்பல் மலையனூர் அருகே பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், அங்கு பதுங்கியருந்த கொலையாளிகள் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த விவகாரத்தில், மணிகண்டனை அந்த கும்பல் கொலை செய்திருப்பது தெரியவந்தது.பின்னர் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மரியாதையாக அமமுகவில் இணைந்துவிடு -மிரட்டல் விடுத்த முன்னாள் கவுன்சிலர்

ABOUT THE AUTHOR

...view details