தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 9, 2019, 8:33 PM IST

ETV Bharat / jagte-raho

மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலி! ஒருவர் கைது!

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் போர்வெல் போடுவதற்காக சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த வழக்கில் போர்வெல் நிறுவன உரிமையாளர் பழனிராஜ் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

DEAD

சென்னையை அடுத்துள்ள கொளத்தூரைச் சேர்ந்தவர்கள் சிவா, பாண்டி. இவர்கள் இருவரும் மாதவரம் அருகே உள்ள ரித்தீஷ் போர்வெல் நிறுவனத்தில்வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் டிபி சத்திரம் ராணி அண்ணா நகரில் வசிக்கும் தேவகி என்பவரது வீட்டிற்கு போர்வெல் போடுவதற்காக நேற்று மதியம் சென்றிருந்தனர்.

அப்போது, போர்வெல் இயந்திரத்தை சரியாக நிலை நிறுத்துவதற்கான பணிகளை செய்து கொண்டிருந்தபோது மின்சாரக் கம்பிகள் தரையில் இருப்பது தெரியாமல் கடப்பாறையை கொண்டு கீழ் நோக்கி குத்தியுள்ளனர். அதில் மின்சாரம் பாய்ந்து இரு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிவா, பாண்டி ஆகியயோரது சடலங்கள்

மின்சாரம் தாக்கியதில் முனியாண்டி என்பவரும் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டிபி சத்திரம் காவல் துறையினர், போர்வெல் நிறுவனத்தின் உரிமையாளர் பழனிராஜின் அலட்சியம்தான் இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

மின்சாரம் தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முனியாண்டி

இதனைத் தொடர்ந்து அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் இப்பகுதியில் செல்லும் மின்சாரம் கம்பிகளை பூமியினுள் புதைக்காமல் மின்சார ஊழியர்கள் மிக அலட்சியமாக இருந்ததும் ஒருகாரணம் என்று பொது மக்கள் கூறினர்.

இதுகுறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அதுதொடர்பான முறையான அறிக்கை மின்சார வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட பின்னர் இந்த விபத்துக்கு காரணமான மின்சார ஊழியர்கள் மீதும் விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்யப்படும் என டிபி சத்திரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details