காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள எல்லப்பா நகரில் கடந்த சில மாதங்களாக ஒருவரது வீட்டில் நாள்தோறும் சந்தேகத்துக்கு இடமான முறையில் சில பெண்களும், ஆண்களும் அவ்வப்போது வந்து செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, எல்லப்பா நகரில் உள்ள வீட்டில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி மணிமேகலை தலைமையிலான அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் நேற்று (டிசம்பர் 27) திடீரென சோதனை மேற்கொண்டனர்.
ஆட்சியர் அலுவலகம் அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 8 பேர் கைது
காஞ்சிபுரம்: ஆட்சியர் அலுவகம் அருகே பாலியல் தொழில் செய்து வந்த 6 பெண்கள் உள்பட 8 பேரை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கைது செய்தனர்.
பாலியல் தொழில்
அப்போது, வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது அம்பலமானது. இதையடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்கள், ஆட்டோ ஓட்டுநர் உள்பட 8 பேரை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே பாலியல் தொழில் நடைபெற்று வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TAGGED:
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்