ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். முன்னாள் கஞ்சா வியாபாரியான இவர், சமீபகாலமாக கஞ்சா விற்பனை தொழிலை விட்டுவிட்டு கட்டட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். கட்டட மேஸ்திரியாக இருக்கும் விஜயகுமாரை கஞ்சா விற்பனை செய்வதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அடிக்கடி அழைத்து, பணம் வசூல் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச.30) மீண்டும் விஜயகுமாரை அழைத்து வந்து காவல் துறையினர், 15 கிலோ கஞ்சா வைத்திருப்பதாக வழக்கு போட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர். சாதாரண வழக்காக பதிவு செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பேரம் பேசியுள்ளனர்.
ஒரு லட்ச ரூபாய் கேட்ட நிலையில், நேற்று முன்தினம் (டிச.30) 30 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயகுமாரின் மனைவி மகேஸ்வரி காவல் துறையினரிடம் கொடுத்துள்ளார். மீதிப் பணத்தை புரட்ட தனது தாலியை விற்க மகேஸ்வரி முயன்ற போது, உறவினர் ஒருவர் அதை தடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.