கொளத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் நீண்ட நாள்களாக அப்பகுதி முழுவதும் கண்காணித்துவந்தனர்.
இந்நிலையில், கொளத்தூர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரை பிடித்துக் காவல் துறையினர் விசாரித்தனர்.
அப்போது, அவர்களது பையில் தடைசெய்யப்பட்ட 50 போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள் 300, மெத்தபெட்டமைன் 20 கிராம், கஞ்சா இரண்டரை கிலோ ஆகியவை இருப்பது கண்டு அவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.