திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வாடகை பாத்திரக்கடை நடத்திவந்தார். இவருக்கும் அதே ஊரில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்துவரும் சுதா என்பவருக்கும் பழக்கம் இருந்தநிலையில் சுதா பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பிரச்னை முற்றிய நிலையில், விருவீடு காவல் துறையினர் சமரசம் செய்து வைத்தனர். இந்நிலையில், மணிகண்டன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.