கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியை சிலர் ஆன்லைனில் பார்ப்பதால், அதிகளவில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வகையில், ஹைதராபாத்தில் ஒரு கும்பல் பெட் பஷீராபாத்தில் எஸ்ஓடி (SOT) பாலநகர் மண்டலம் கிரிக்கெட் குழு சட்டவிரோதமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி அக்.4ஆம் தேதி சைபராபாத் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், பெட் பஷீராபாத் அருகில் கிரிக்கெட் பந்தயம் தொடர்பாக ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தெரியவந்தது.
கூகுள் பே (google pay) , போன் பே (phonepe) மூலம் 22 லட்சத்து 89 ஆயிரத்து 400 ரூபாய் ரொக்கம், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 13 லட்சம் ரூபாயும், எட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆன்லைன் சூதாட்டம் நடக்கும் முறை