தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

இரு தரப்பினரிடையே மோதல்... பெட்ரோல் குண்டு வீசி அச்சுறுத்தல்... - Panamadangi police investigat

வேலூர்: கீழ் முட்டுகூர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருதரப்பைச் சேர்ந்தவர் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கீழ் முட்டுகூர் பகுதியில் பரபரப்பு

By

Published : Aug 31, 2019, 9:27 AM IST


வேலூர் மாவட்டம் கீழ் முட்டுகூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், வடுகந்தாங்கலில் உள்ள பள்ளிக்கு சென்று வரும்போது மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஒரு தரப்பை சேர்ந்த மாணவனின் சகோதரர் விசாரித்ததால், மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கீழ் முட்டுகூர் கிராமத்தை சேர்ந்த தரணி(27), லலித்குமார்(27) தரப்புக்கும் கோபி(24), விஷ்ணு(23), சக்திவேல்(20), அருண்(25) தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பனமடங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இரு தரப்பினரிடையே தொடரும் மோதல்... பெட்ரோல் குண்டு வீசி அச்சுறுத்தல்...

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு கீழ் முட்டுக்கூர் பகுதியில் விஷ்ணு, அருண் ஆகியோரின் இருசக்கர வாகனங்களை, தரணி, லலித்குமார் தரப்பினர் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து, இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை பனமடங்கி காவல் துறையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து விஷ்ணு, அருண் ஆகியோர் தரப்பைச் சேர்ந்த சம்பத் என்பவரின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இதனால் வீடு தீ பற்றி எரிந்ததில் சம்பத்தின் மனைவி பாதிக்கப்பட்டு வடுகந்தாங்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பனமடங்கி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details