விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிரணி பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் காயத்திரி. கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த இவர் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் மீது பாலியல் புகார், பண மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பாஜக தலைமைக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "நான் விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளராக உள்ளேன். எனக்கு மாவட்ட தலைவி பொறுப்பு வாங்கி தருவதாக கூறி விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலியவரதன் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். மேலும் என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறார்.