தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2020, 12:52 PM IST

ETV Bharat / jagte-raho

ஆசை வார்த்தைக் கூறி காதலியை ஏமாற்றிய ஐடி ஊழியர் கைது

சென்னை: இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிய ஐடி நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

chennai techie arrested for cheating women
chennai techie arrested for cheating women

சென்னை அரும்பாக்கம் பாலவிநாயகர் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (24). இவர், நாவலூரிலுள்ள ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரும், வியாசர்பாடியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்தனர்.

இந்தநிலையில், ஸ்ரீராமின் தாயாருக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை கவனித்து கொள்ள தனது காதலியை உதவிக்கு அழைத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று, மார்ச் முதல் மூன்று மாதங்கள் காதலரின் வீட்டில் தங்கியிருந்து, அவரின் தாயாரை இளம்பெண் கவனித்து வந்தார்.

அந்த நேரத்தில் ஸ்ரீராமும், இளம்பெண்ணும் கணவன்-மனைவி போல் நெருங்கி பழகியுள்ளனர். அண்மையில் இளம்பெண் தனது வீட்டுக்குத் திரும்பியநிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தனது காதலரிடம் கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, அவருடனான காதலை துண்டித்து கொண்டார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது அறிந்த அப்பெண் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இளம்பெண்ணை ஏமாற்றியதாக காதலர் ஸ்ரீராமை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details