தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஓய்வூதியப் பணம் மோசடி - முதியோர்கள் புகார் - காவல் ஆணையர் அலுவலகம்

சென்னை: டி.எச்.எப்.எல் நிறுவனம் மோசடி செய்த ஓய்வூதியத் தொகையை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்ட முதியோர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

pension
pension

By

Published : Dec 20, 2019, 2:26 PM IST

இந்தியா முழுவதும் கடந்த 32 ஆண்டுகளாக இயங்கிவரும் நிறுவனம் டி.எச்.எப்.எல் எனப்படும் தீவான் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம். இதில் முதியோர்கள் பலர் தங்களது ஓய்வூதியப் பணத்தைச் செலுத்தி வந்துள்ளனர். அந்தப் பணத்தை வட்டியுடன் சேர்த்து ஆண்டு இறுதியில் டி.எச்.எப்.எல் நிறுவனம் கொடுத்து வந்துள்ளது. இந்நிலையில் டி.எச்.எப்.எல் நிறுவனம் போலியாக பல நிறுவனங்களை வைத்து சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக செய்தி வெளியானது.

மேலும், சில முதியோர்களின் தொகை அக்டோபர் மாதம் முதிர்வு அடைந்ததால் பணத்தை டி.எச்.எப்.எல் நிறுவனத்திற்குச் சென்று கேட்டுள்ளனர். ஆனால், டி.எச்.எப்.எல் நிறுவனம் 3 மாதங்களாக பணத்தைத் தராமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவசர காலம் மற்றும் மருத்துவ செலவுக்காகச் செலுத்திய பணத்தையும் இந்நிறுவனம் ஏமாற்றியுள்ளதாக முதியோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் செலுத்திய பணத்தை மீட்டுதரக் கோரியும் மனு அளித்தனர்.

ஓய்வூதியப் பணம் மோசடி - முதியோர் புகார்

இதையும் படிங்க: போலி கையெழுத்திட்டு வேட்பு மனுவை வாபஸ் வாங்கிய அடையாளம் தெரியாத நபரால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details