தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 23, 2019, 3:21 PM IST

ETV Bharat / jagte-raho

விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் விளையாடிய திருடன்!

சென்னை: அயனாவரத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.

cellphone
cellphone

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் அயனாவரம் தொடர் வண்டித்துறை குடியிருப்பு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களுடைய செல்போன்களை இருசக்கர வாகனம் ஒன்றில் வைத்து பூட்டிவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

விளையாடி முடித்தவுடன் வந்து பார்த்தபோது, பூட்டை உடைக்காமல் இருசக்கர வாகனத்தில் இருந்த 7 செல்போன்களும் திருடு போயிருந்தது கண்டு சொக்கலிங்கமும் அவரது நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் ஐ.சி.எஃப் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 15 வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட கோயிலில் திருட்டு; கொள்ளையன் கைது!

ABOUT THE AUTHOR

...view details