தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கணவன் கண் முன்னே மனைவி, மகன் வெட்டிக்கொலை; அதிரவைக்கும் சம்பவம்! - brutal murder in namakkal district which leads to death of two

நாமக்கல்: கணவன் கண் எதிரே அவரது மனைவியும், மகனும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

death

By

Published : Jun 10, 2019, 11:59 AM IST

நாமக்கல் எருமப்பட்டி மாணிக்கவேலூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ். இவர் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு பணிக்கு சென்றுவிட்டு, இருதினங்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு எட்டு மணியளவில் தனது மனைவி கெளரி, ஒன்றரை வயது மகன் புகழ்வன் ஆகியோருடன் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடம்...

அப்போது, மூவரும் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடிய நிலையில் சாலையோரம் கிடந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், மூவரையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் கெளரி, குழந்தை புகழ்வன் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயமைடந்த சுரேஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்த தாயும், மகனும்

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இந்த சம்பவம் நடந்ததா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் படுகொலை

ஒன்றரை வயது குழந்தையும், இளம்பெண்ணும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details