கேரள மாநிலம் மூணாறு செண்டுவாரை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரின் மகன் அணீத்குமார் (25). மூணாறு அரசுப் போக்குவரத்து பணிமனையில் தினக்கூலியாக பணிபுரிந்துவருகிறார். ஏப்ரல் 3ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டு விழாவிற்குச் சென்றுள்ளார்.
அங்கு மூன்று நாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, உணவு உண்பதற்காக ஆண்டிப்பட்டியில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், தங்களிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைக்காட்டி கூட்டிச்சென்று அணீத்குமாரிடமிருந்து, ஒன்றரை பவுன் தங்கச்செயின், ஐந்து கிராம் எடையுள்ள மோதிரம், ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் பாக்கெட்டில் இருந்த 1,500 ரூபாய் உள்ளிட்டவற்றை மிரட்டி பறித்துள்ளனர்.