தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 13, 2019, 9:39 PM IST

ETV Bharat / jagte-raho

'ரூ.10லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்'

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பாண்டிச்சேரியிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள எரிசாரயம், மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

alcohol smuggling from pondicherry

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பாண்டிச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் ஆணையர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இனறு அதிகாலை 5 மணிக்கு அரசூர் - பண்ருட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியே வந்த லாரி ஒன்றை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.

அதில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,500 லிட்டர் எரிசாராயமும், 4,800 பாண்டிசேரி மதுபாட்டில்களும் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாரயங்களை காவல் ஆணையர் ஆய்வு செய்கிறார்


இதையும் படிங்க: சட்டவிரோத டாஸ்மாக் மதுபான விற்பனை - தடைகோரி தீர்மானம்
!

ABOUT THE AUTHOR

...view details