தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: கைதான 6 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! - sowcarpet murder

சவுகார்பேட்டையில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான, ஆறு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

6 arrested under thuggery law, sowcarpet murder case, சவுகார்பேட்டை கொலை வழக்கு, 6 பேர் மீது குண்டர் சட்டம், குண்டர் சட்டம், சென்னை குற்ற செய்திகள், chennai crime news, chennai news, சென்னை முக்கிய செய்திகள், sowcarpet murder
sowcarpet murder case

By

Published : Jan 10, 2021, 7:17 AM IST

சென்னை: சவுகார்பேட்டை கொலை வழக்கில் சம்பந்தபட்ட ஆறு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சவுகார்பேட்டையில் தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகியோர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குடும்ப தகராறு காரணமாக ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, அவரது சகோதர்களான விலாஷ், கைலாஷ், ராஜீவ் ஷிண்டே, விஜய் உத்தம், ரவீந்திர நாத்கர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

காவல் ஆணையரின் உத்தரவு

இதனையடுத்து 6 பேரையும் டெல்லி, புனே உள்ளிட்ட பகுதிகளில் வைத்து தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் துப்பாக்கி கொடுத்து உதவியதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜீவ் துபே என்பவரும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 6 பேரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்த வேளையில் கைதான 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details