கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அண்ணாநகரில் கார்த்திகேயன் (56) என்பவர் வசித்துவருகிறார். மின்வாரிய ஊழியரான இவர், சொந்த வேலை காரணமாக சென்னை சென்றுள்ளார்.
இதனையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று 45 சவரன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.