தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 16, 2020, 11:59 PM IST

ETV Bharat / jagte-raho

போலீசை பார்த்ததும் பதறியடித்து ஓடிய பெண்கள்... விசாரணையில் வெளிவந்த உண்மை!

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மாங்குளம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பெண்களை எம்.ரெட்டியாபட்டி காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

3 பெண்கள் கைது
3 பெண்கள் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக எம்.ரெட்டியாப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த மூன்று பெண்கள் காவல்துறையினரை கண்டதும் திடீரென ஓட்டம் பிடித்தனர். பெண்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, இந்த மூன்று பெண்களும் அதே ஊரைச் சேர்ந்த மீனாட்சி, தாரக நாச்சியார், சமுத்திரகனி என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் பல நாட்களாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு: இளைஞர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details