கடந்த மாதம் ஆர்.கே.நகர் பகுதிக்குட்பட்ட வினோபா நகர் மார்க்கெட் பகுதியில், செல்ஃபோன் கடை ஒன்றின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து ஆர்.கே.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ஐஓசி பேருந்து நிறுத்தம் அருகே காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மூன்று பேரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர்கள் எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சரத் என்ற பூச்சி சரத் (21), கௌரி சங்கர் (24), கொருக்குப்பேட்டை மேயர் பாசு தெருவை சேர்ந்த பாஸ்கர் என்ற பல்லு பாஸ்கர் (22) என்பது தெரியவந்தது.