தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை பிரித்து ரூ. 21 ஆயிரம் கொள்ளை - கடந்த 4 நாள்களில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு

சென்னை: தாம்பரம் அருகே சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை பிரித்து 21 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

theft
theft

By

Published : Jan 9, 2021, 5:52 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த மேற்கு தாம்பரம், முல்லை நகர், முடிச்சூர் சாலையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் வெங்கடேசன். இவர் வழக்கம் போல் நேற்று (ஜன.8) கடையை மூடிவிட்டு இன்று (ஜன.9) காலை திறந்து கடைக்குள் சென்ற போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கடையை சோதனையிட்ட போது, கல்லாவில் இருந்த 21ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் சிகரெட்டுகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக தாம்பரம் காவல்நிலையத்திற்கு புகாரளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சூப்பர் மார்க்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை பிரித்து கொள்ளை

கடந்த 4 நாள்களில் மட்டும் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் 10க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருவதால் வணிகர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:'பெண்களை இழிவுப்படுத்தி மிகக் கேவலமாகப் பேசிய உதயநிதி' - காவல் ஆணையரகத்தில் புகார்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details