விருதுநகர் என்ஜிஓ காலனி பாரதி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (53). இவர் ராமநாதபுரத்தில் வேளாண்மை அலுவலராக பணி புரிந்து வருகிறார். கடந்த 6ஆம் தேதி குடும்பத்தோடு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இன்று (நவ.10) காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக விருதுநகர் ஊரக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.