தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2023, 12:43 PM IST

ETV Bharat / international

தொலைநோக்கு சிந்தனை, அர்ப்பணிப்பில் பிரதமர் மோடிக்கு ஈடு இணையில்லை - அமெரிக்க அமைச்சர்

பிரதமர் மோடி தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் என்றும்; நாட்டு மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பு விவரிக்க முடியாதது என்றும் அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

United States Secretary of Commerce
United States Secretary of Commerce

வாஷிங்டன் : இந்திய தூதரகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரெய்மான்டோ கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவில் பேசிய அவர், ’இந்திய பிரதமர் மோடியுடன் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட தனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும், அவர் யார் என்று அனைவருக்கும் தான் சொல்லி புரிய வைக்க வேணடிய அவசியம் இருக்காது என்றும்’ கூறினார்.

சில காரணங்களுக்காக உலகின் மிகப்பிரபலமான தலைவராக பிரதமர் மோடி கருதப்படுகிறார் என்றும்; அவர் நம்ப முடியாத தொலைநோக்கு சிந்தனை கொண்டவராக உள்ளார் என்றும் கூறினார். இந்திய மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பு நிலை விவரிக்க முடியாதது என்றும்; ஆழமான உணர்ச்சிவசமிக்கது என்றும்; உண்மையானது என்றும் தெரிவித்தார்.

மக்களை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும்; உலக வல்லரசாக இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே பிரதமர் மோடி விருப்பமாக கொண்டு உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். அவரது விருப்பம் உண்மையாகி உள்ளதாகவும்; நிகழ் காலத்தில் அது நடந்துகொண்டு இருப்பதை ஒவ்வொருவரும் காண்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால், இந்த சந்திப்பின் சிறந்த அம்சம் என்னவென்றால், பிரதமர் மோடியை அறிந்த அனைவருக்கும், அவர் ஒரு தொழில் நுட்ப வல்லுநர் என்பது தெரிந்து இருக்கும். அதேநேரம் அவர் கருத்தியல் விவரங்களில் ஆழமாக அறிவு கொண்டவர். ஒருமுறை அவருடன் ரேடியோ அலைவரிசைகள் மூலம் நெட்வொர்க் அணுகலை பெறுவது பற்றியும் செயற்கை நுண்ணறிவு குறித்தும் கலந்து உரையாடியபோது அவரது கருத்துகளைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன் என்றும் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரெய்மான்டோ தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை நினைவு கூர்ந்த ஜினா ரெய்மான்டோ, அப்போது பிரதமர் மோடியிடம் தொழில்நுட்பத்தில் இரண்டு சுற்றுச்சூழல் அமைப்புகள் இருப்பதாகவும்; ஒன்று நமது ஜனநாயக மதிப்புகளுக்கு இணையானது என்றும்; மற்றொன்று இந்தியாவும் அமெரிக்காவும் இந்த தொழில்நுட்பச் சூழலியலில் உலகை ஒன்றாக வழிநடத்த வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

அதற்கு பிரதமர் மோடி, AI என்பது செயற்கை நுண்ணறிவு அல்ல என்றும்; A for அமெரிக்கா, I for இந்தியா ஆகியவற்றின் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்திற்கானது என்று கூறியதாகத் தெரிவித்தார். கடந்த மாதம் 3 நாள்கள் பயணமாக அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரெய்மான்டோ இந்தியா வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூதர் சாந்தனு, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இந்தோ - பசிபிக் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குர்ட் கேம்பெல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :அடிக் அகமது துப்பாக்கிச்சூடு - "அராஜகத்தின் உச்சபட்சம்" - யோகி அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி!

ABOUT THE AUTHOR

...view details