தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அடல்ட் கன்டென்ட் கிரியேட்டர்களை அனுமதிக்க ட்விட்டர் நிறுவனம் திட்டம்... ஆபத்து யாருக்கு...? - ஆபாசப்படங்கள்

அடல்ட் கன்டென்ட் கிரியேட்டர்களை அனுமதித்து, அதன் மூலம் வருவாய் ஈட்ட ட்விட்டர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Twitter
Twitter

By

Published : Aug 31, 2022, 5:02 PM IST

18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பார்க்கும் அடல்ட் கன்டெட்டுகளை (Adult contents) அனுமதிக்க ட்விட்டர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பார்ன் வீடியோக்கள், ஆபாச புகைப்படங்கள் உள்ளிட்ட வயதுவந்தோர் பார்க்கும் அடல்ட் கன்டென்டுகளை உருவாக்கும், கன்டென்ட் கிரியேட்டர்களை அனுமதித்து, அதன் மூலம் வருவாய் ஈட்ட ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நடவடிக்கை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த அடல்ட் கன்டெட்டுகள் விதிமுறைகளுக்கு உட்பட்டதுதான் என்றும் ட்விட்டர் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பிரபல அடல்ட் கன்டெட் தளமான ஒன்லி பேன்ஸ்-க்கு போட்டியாளராக ட்விட்டர் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம், அடல்ட் கன்டெட்டுகளை குழந்தைகள் பார்க்கிறார்களா? என்பதைக் கண்காணிக்கவும், பார்க்காமல் தடுக்கவும் ட்விட்டர் நிறுவனத்திடம் எந்த தொழில்நுட்பமும் இல்லை என சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், குழந்தைகளை ஈடுபடுத்தி எடுக்கப்படும் சைல்டு பார்ன் கன்டென்ட்டுகளையும் ட்விட்டரால் தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இதனால், ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: குருவிக்கே கூண்டா... ட்விட்டர் முன்னாள் பாதுகாப்புத்துறை தலைவர் புகார்... மகிழ்ச்சியில் மஸ்க்

ABOUT THE AUTHOR

...view details