தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிங்கப்பூரில் இருவருக்கு புதிய வகை ஒமைக்ரான் தொற்று - பிரிட்டன்

சிங்கப்பூரில் இரண்டு பேருக்கு பி.ஏ., 2.12.1 வகை ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Omicron

By

Published : Apr 30, 2022, 9:39 PM IST

சிங்கப்பூர்:ஒமைக்ரான் வைரசின் துணைப் பிரிவுகளான பி.ஏ., 1 மற்றும் பி.ஏ., 2 வகை வைரஸ்கள் சேர்ந்து, எக்ஸ்.இ., என்ற மரபணு மாறிய புதிய வகை வைரசை உருவாக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்த துணைப்பிரிவு வைரஸ்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அதிகளவு பரவத் தொடங்கியது.

பி.ஏ., 2 வகை அதிகளவு பரவும் தன்மை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளில் 90 சதவீதம் பி.ஏ.,2 வகை மற்றும் அதன் துணைப்பிரிவான பி.ஏ., 2.12.1 காரணமாகவே ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சிங்கப்பூரில் இரண்டு பேருக்கு பி.ஏ., 2.12.1 வகை ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பி.ஏ., 2.12.1 வகை, பி.ஏ., 2 வகை அளவுக்கு வீரியமானது இல்லை என்றும், அதன் பரவும் தன்மை குறித்து முழுமையாக தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

இதையும் படிங்க: அமெரிக்க துணை அதிபருக்கு கமலா ஹாரிசுக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details