தமிழ்நாடு

tamil nadu

நேபாள விமான விபத்து: 14 பேரின் உடல்கள் மீட்பு

நேபாளத்தில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்த 22 பயணிகளில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By

Published : May 30, 2022, 12:56 PM IST

Published : May 30, 2022, 12:56 PM IST

நேபாள விமான விபத்து
நேபாள விமான விபத்து

காட்மாண்டூ:நேபாளத்தின் தாரா ஏர் என்ற சிறிய ரக பயணிகள் விமானம் பொக்காரா நகரில் இருந்து புறப்பட்டு 22 நிமிடங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து நடுவானில் மாயமானது. இந்த 2 ஹெலிகாப்டர்களை கொண்டு விமானத்தை தேடும் பணியில் நேபாள ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று (மே 29) பனிப்பொழிவு அதிகமாக இருந்த காரணத்தால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. மேலும், இன்று (மே 30) மீண்டும் தேடுதல் தொடங்கப்பட்ட நிலையில், முஸ்தாங் மாவட்டத்தின் சனோஸ்வேர் என்ற பகுதியில் விமானம் விழுந்து கிடப்பதை நேபாள ராணுவம் கண்டறிந்தது. மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் சிதறிய உதிரி பாகங்களின் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து, மீட்புக்குழுவினர் சிறிய ரக ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 22 பேரில் 14 பேரின் உடல்களை தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாளிகள் பயணித்தனர். அதில், இந்தியர்கள் நால்வரும் மும்பையின் தானே பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாயமான நேபாள விமானம்: விபத்து புகைப்படத்தை வெளியிட்டது ராணுவம்

ABOUT THE AUTHOR

...view details