கோலாலம்பூர்:மலேசியாவில் உள்ள சுற்றுலா முகாம் ஒன்றில் இன்று (டிச.16) ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் மண்ணுக்கடியில் சிக்கியுள்ள 25 பேரை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. கோலாலம்பூரில் இருந்து வடக்கே 50 கி.மீ தொலைவில் படாங் கலியில் சுற்றுலா முகாம் அமைந்துள்ளது. அப்பகுதியில் 94 பேர் இருந்ததாக அந்நாட்டு காவல்துறை அதிகாரி சுஃபியன் தெரிவித்தார்.
5 வயது சிறுவன் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாகவும், 53 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுஃபியன் தெரிவித்தார். இதனையடுத்து 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.