ஜனவரி 8ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் இணக்கமான உரையில், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளேன் என விரும்பம் தெரிவித்தார். இதன் காரணமாக எண்ணெய் விலை குறைந்து, பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. ஆனால் இது தற்காலிமானதுதான்.
12 தொலை துார ஏவுகணைகளைக் கொண்டு ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க விமானத் தளங்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட ஈரான், அமெரிக்காவுடனான மோதலை தணித்ததோடு மட்டுமல்லாமல், அதன் ராணுவ பலத்தை புலப்படுத்தியுள்ளது.
ஜனவரி 3ஆம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் சிறப்புப் பிரிவான குத்ஸின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இது அமெரிக்கா என்ற பெரும் பூதத்தையும், இஸ்லாமிய மதகுருக்களால் ஆட்சி செய்யப்பட்டு வரும் ஈரானுக்கும் இடையே புதிய மோதலை வெடிக்கச் செய்துள்ளது. இதனால், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர் பதற்றம் தொற்றியுள்ளது.
இதையும் படிங்க : போருக்கு அறைகூவல்: 2020ஐ அதிர்வுடன் ஆரம்பித்துவைத்த அமெரிக்கா
ஈரானில் 1979ஆம் ஆண்டு மாணவர் புரட்சியை அடுத்து, அந்நாட்டை ஆட்சிசெய்துவந்த ஷா அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நாட்டைவிட்டு தப்பியோடினார். அதன்பிறகு, ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்க இஸ்லாமிய மதகுரு அயத்துல்லா ரவுல்லா கோமினி இஸ்லாமிய மத ஆட்சியை நிறுவினார். அந்த ஆண்டு நவம்பர் மாதம், தீவிரவாதக் கொள்ளைகள் கொண்ட மாணவர்கள் அமெரிக்கத் தூதரகத்தை கைப்பற்றி, 52 தூதர்களை சிறைபிடித்து அவர்களை 444 நாட்கள் பிணையில் வைத்திருந்தனர். அன்றிலிருந்து, ஈரானும் அமெரிக்காவும் கீரியும் பாம்புமாக மோதி வருகின்றன.
ஈரானின் இஸ்லாமிய மதகுருமார்கள் ஆட்சியை ஆட்டம் காணச்செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் அமெரிக்கா சிறப்பாகவே செய்து வருகிறது.
1980–1988 ஈரான் – ஈராக் போரின்போது அமெரிக்கா, ஈராக் அதிபர் சதாம் உசேனை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் தாராளமாகப் பணம், ஆயுதம், யுத்தப் பயிற்சி ஆகிய உதவிகளை அளித்தது. சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான அமெரிக்கா நட்புறவு பாராட்டி வந்ததால் பிரச்னை மேலும் சிக்கலாகியது.
ஈரான் முன்னாள் அதிபர் முகமது அகதுநிஜாத், "இஸ்ரேல் ஒரு மானம்கெட்ட நாடு, அதைப் புவியிலிருந்தே துடைத்தெறிய வேண்டும்" என கடுமையாகச் சாடியுள்ளார். இவரைப் போன்ற ஈரானிய தலைவர்கள் பலர் இஸ்ரேலை அடியோடு வெறுக்கிறார்கள்.
ஈரான் அணு ஆயுத லட்சியத்துக்கு முட்டுக்கட்டை
அந்நிய சக்திகளின் சவால்களைச் சமாளிக்கும் பொருட்டு ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிக்கும் வேலையில் இறங்கியது. இதற்கு தேவையான உதவிகள், கருவிகளை பாகிஸ்தான் வழங்கியது. ஈரானின் அணு ஆயுத லட்சியத்தை முறியடிக்கும் நோக்கில் அந்நாட்டின் மீது ஐநா, அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தன.
பின்னர் அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முயற்சியால், 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய வல்லாதிக்க நாடுகளுடன் ஈரான் JCPOA என்றழைக்கப்படும் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இது ஈரானிய அணு ஆயுத லட்சியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் திருப்புமுனையாக அமைந்தது.
ட்ரம்ப் வருவகையால் கவிழ்ந்த ஒப்பந்தம்
ஆனால், 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையின்போது ட்ரம்ப் இந்த ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு தூரோகம் இழைத்துள்ளதாகவும், பெரும் வராலாற்றுப் பிழை என்றும் கடுமையாகச் சாடினார். மேலும், தான் வெற்றிபெற்றால் மேற்படி ஒப்பந்தத்திலிருந்த அமெரிக்காவை விலக்கிடுவேன் என சூளுரைத்தார்.
தான் கூறியது போலவே, 2018ஆம் ஆண்டு மே மாதம் ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து, அந்நாட்டிடமிருந்து எந்த நாடும் கட்சா எண்ணெய் வாங்கக் கூடாது என வலியுறுத்தினார்.
இந்த முறை ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாராத் தடையை ஐநா அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இத்தகைய அதிகார சூழ்ச்சி வலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் விழ மறுத்தன.
பக்கச்சார்பற்ற இந்தியா