தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 11, 2023, 7:18 PM IST

ETV Bharat / international

150 வருடம் பழமையான ஆலமரத்துடன் 53 உயிர்களையும் காவு வாங்கிய ஹவாய் காட்டுத்தீ!

இந்தியாவில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட ஆலமரம் 150 ஆண்டுகளை கடந்த நிலையில், ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி இரையாகியுள்ள நிலையில், இந்த தீயில் சிக்கி இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஹவாய்: அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரின் உணவுகளோடு ஒன்றி லஹைனா பகுதியில் வாழ்ந்த 150 வருடங்கள் பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலமரம் ஒன்றும் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது.

அமெரிக்காவின் தீவு மாநிலமான ஹவாயில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. இந்த காட்டுத்தீ அருகே உள்ள மாய் தீவிற்குப் பரவிய நிலையில் அங்கிருந்து, உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லஹைனா பகுதிக்கும் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 150 வருடங்கள் பழமையான ஆலமரம் ஒன்று எரிந்து சாம்பலாகியுள்ளது பலருக்கும் வேதனை அளித்துள்ளது.

மேலும் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சேதமான நிலையில் ராணுவமும், பேரிடர் மீட்பு படையும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீயில் இருந்து தப்பிக்கப் பலர் கடலுக்குள் குதித்து உயிர் தப்ப முயற்சித்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. காலநிலை மாற்றம், காற்றில் ஈரப்பதம் இன்மை, உலர்ந்த மரங்கள் மற்றும் செடிகள் உள்ளிட்ட பல காரணங்களால் சூறாவளிக் காற்றுடன் சேர்ந்து காடு மொத்தமும் தீ பற்றி உள்ளதாகக் காலநிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து, பேசியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹவாய் காட்டுத்தீ ஒரு மிகப்பெரிய பேரழிவு என அறிவித்து உள்ளார். நெருப்பு வனமாகக் காட்சியளிக்கும் ஹவாய் தீவு, லஹைனா போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் பலர் விமான நிலையங்களில் கூடியுள்ளனர். கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் இந்த காட்டுத்தீ தொடர்பான காணொளிகளை மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இயற்கையின் பேரழிவு குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

150 ஆண்டுகள் பழமையான ஆலமரத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு; ஹவாய் காட்டுத்தீயில் சிக்கி லஹைனா பகுதியில் உள்ள ஆலமரம் ஒன்று எரிந்து சேதம் அடைந்ததாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. பலரது கதைகளையும், கவலைகளையும், உணர்வுகளையும், மகிழ்வுகளையும் தாங்கி நின்ற அந்த மரம், காட்டுத்தீக்கு இரையாகியுள்ளது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த ஆலமரத்துக்குப் பின்னால் இந்தியாவுடனான வரலாற்று பிணைப்பு இருக்கிறது என்பதுதான் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

அந்த வகையில் இந்த மரம், லஹைனாவில் முதல் புராட்டஸ்டன்ட் மிஷனின் 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கடந்த 1873 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பரிசாக அனுப்பப்பட்டுள்ளது என வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. கமேஹமேஹா என்ற மன்னர் லஹைனாவை தனது ராஜ்யத்தின் தலைநகராக அறிவித்து 70 வருடங்கள் கழித்து இந்த மரம் அங்கு நடப்பட்டுள்ளது.

8 அடி உயரத்தில் நடப்பட்ட ஆலமர நாற்று இன்று 60 அடி மரமாக வளர்ந்து நிற்கிறது. இந்தியாவிற்கும், ஆலமரத்திற்கும் இடையே புத்தர் வரலாறும் இருப்பதால் லஹைனாவில் உள்ள அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து பலரும் தியானம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. வான் உயர வளர்ந்து, ஏராளமான பறவைகள் தங்கி வாழ்ந்து, மரத்தின் விழுதுகள் மண்ணோடு பின்னிப் பிணைந்து, வெயிலில் வாடி வருவோரை வரவேற்ற லஹைனாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலமரம் இன்று காட்டுத்தீக்கு இரையாகி இருப்பது உலக செய்தியாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:'லூனா-25' விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய ரஷ்யா: சந்திரயான்-3க்கு முன்பே தரையிறங்குகிறதா?

ABOUT THE AUTHOR

...view details