சியோல்(தென்கொரியா): ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 151 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தென்கொரிய நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த நெரிசலில் 82 பேர் படுகாயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வை நாட்டின் பெரும் துக்கசம்பவமாக அறிவித்த தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரும் இப்பெரும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, இத்தகைய கஷ்ட சூழலில், இந்தியா நிச்சயம் தென்கொரியாவுடன் துணை நிற்குமெனவும் அந்நாட்டிற்கு ஆறுதல் கூறினார்.