மாஸ்கோ:ரஷ்யாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக பனியில் புதைந்து கிடந்த பண்டோரா யெடோமாஎன்னும் ஜாம்பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாவரங்கள், விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருப்பதாகவும் இதனால் உலகளாவிய பேரழிவுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நியூயார்க் போஸ்ட் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளிதழில், ரஷ்யாவின் யாகுடியாவில் உள்ள யுகேச்சி அலஸ் ஏரியில் ஜாம்பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்த முதல்கட்ட ஆராய்ச்சியில் பிரெஞ்சு விஞ்ஞானிகள், இது பாண்டோரா யெடோமா வைரஸ் என்பதையும் 48,500 ஆண்டுகள் பழமையானது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வைரஸ் தாவரங்கள், விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருக்கிறது. சைபீரியாவில் 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 30,000 ஆண்டுகள் பழமையான வைரஸை விட பாண்டோரா வைரஸ் விகாரமானது. அறியப்படாத பண்டைய வைரஸ்களின் மறுமலர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் கணிக்க முடியாதவை. இயற்கையாகவே உறைபனியின் மகத்தான கட்டிப்பாட்டில் வைக்கப்படிருக்கும் வைரஸ்கள் 10 லட்சம் ஆண்டுகள் வரை உறைந்திருக்கும். இதனை மனித முயற்சிகள் வெளிக்கொண்டுவருவது என்பது உலகளாவிய பேரழிவை தூண்டிவிடும் செயலாகும். இதற்கு பிரெஞ்சு விஞ்ஞானிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் வைரஸ் ஆராய்ச்சிகள் நடத்தப்பதாக தெரிவிக்கின்றனர்.