வளைகுடா அருகேயுள்ள சர்வதேச கடல் பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி தங்கள் நாட்டு கடற்படையின் கப்பல்கள் சென்றுகொண்டிருந்தபோது ஈரான் பாதுகாப்புப் படையின் 11 கப்பல்கள் ஆபத்தான, பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்க கடற்படை குற்றஞ்சாட்டியிருந்தது.
இதையடுத்து, ஈரானின் தென் கடல் பகுதியில் அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈரான் கப்பல்கள் ஈடுபட்டால் அக்கப்பல்கள் மீது குண்டு வீச தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள ஈரான் ராணுவப் படையின் தலைமைத் தளபதி ஹொசைன் சலாமி, அமெரிக்காவின் முறையற்ற ஆபத்தான நடவடிக்கைகள் காரணமாகவே அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக விளக்கமளித்தார்.